மருத்துவக் குணங்கள்: கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும். ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும். 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும். - 

மருத்துவக் குணங்கள்:
  1. வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
  2. (விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.
  3. யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
  4. கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  5. வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
  6. (விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.
  7. யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
  8. கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.


மருத்துவக் குணங்கள்:
  1. தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
  2. இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  3. பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
  4. துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
  5. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

         பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை "உள்நோக்கத்துடன்தான்" திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும், காட்சியின் 
அழுத்தமும் சொல்லிக்கொடுப்பது வழக்கம். என்றாலும், அவுட்டோர் வந்த இடத்தில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும் லாட்ஜின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு டயலாக் 
சொல்லிக்கொடுப்பது யூகத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருந்தான். அதனால்தான் கதவை திறந்து வைத்தான். ஆனால் அதற்கு அர்த்தம் இல்லாதது போலிருந்தது 
நாயகி ராகினியின் பார்வை.
அவனைத்தின்று விடுவது போல பார்த்தாள். கண்களில் கள்ளம். கையில் இருந்த பேப்பரை கீழே வைத்துவிட்டு அவளை முறைத்தான் பிரபாகரன். இது கோபப்படும் 
தருணம் அல்ல.
நிதானமாகப் பேசினான்.
"ராகினி நாளைக்கு க்ளைமாக்ஸ். நாலு பக்க டயலாக் பேசணும். அதப்பத்தி நீ அலட்டிக்கிட்ட மாதிரி எனக்குத் தோணல. ஷூட்டிங்ல சொதப்பின டைரக்டர் என்னை 
தொலைச்சிடுவார். ப்ளீஸ் இங்க கவனம் வை" என்றான் கெஞ்சலாக.
படப்பிடிப்புத் தொடங்கிய இந்த ஆறு மாதங்களில் ராகினிக்குத் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதையும் அதை அவள் சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம் 
வெளிப்படுத்திக் கொண்டிருப்பதையும் உணர்ந்தே இருந்தான். ஆனால் அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது குறித்து அவன் சிந்தித்ததுகூட இல்லை.
நடிகையைக் காதலித்து கைப்பிடிப்பதற்காக அவன் கும்பகோணத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வரவில்லை. அவனுக்கென்று லட்சியம் இருந்தது. வெறி இருந்தது. 
சாதிக்கும் எண்ணம் இருந்தது. தமிழ் சினிமா குறித்தான ஒரு பார்வையும், திரைப்படம் குறித்தான வித்தியாசமான ஒரு கோணமும் இருந்தது. அதன் காரணமாகத்தான் 
ராகினியின் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் விலகி இருந்தான். இன்னும் இரண்டு நாள் படிப்பிடிப்பு முடியப் போகிறது. அதற்குள் ராகினி அசட்டுத்தனமாக ஏதாவது 
அவனிடம் தன்னை வெளிப்படுத்துவாள் என்பதை எதிர்பார்த்திருந்தான்.
அதற்கான தனிமை சூழ்நிலைதான் இன்றைய தினம் என்பதை உள்ளுணர்வு உணர்த்திற்று.
"எப்ப என்னை புரிஞ்சுக்கப் போறீங்க பிரபாகர்?"
கேட்டே விட்டாள்.
"நான் எதுக்கு உன்னைப் புரிஞ்சுக்கணும்?"
ஏதும் புரியாதவன் போல கேட்டான்.
ராகினி சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவன் வயதை ஏதோ பண்ணிற்று. அற்புதமான சிரிப்பு. ஓர் இணை இயக்குநராக ஒரு படைப்பாளியாக ராகினியை அவனால் 
புறக்கணிக்க முடியாது. அப்படி ஓர் அழகி. அதற்கு இணையாக நடிப்பு. கேரளாவில் இருந்து புகைப்படம் வந்தபோதும் பிற்பாடு இயக்குநரோடு நேரடியாகப் பார்த்தபோதும் 
மனதுக்குள் இருந்த நம்பிக்கையை முதல் நாள் படப்பிடிப்பிலேயே சிதறடித்தாள். முகத்தின் ஒவ்வொரு அங்குலமும் நடிப்பை வெளிப்படுத்திற்று. காலங்காலமாக நடிப்பவள் 
போன்ற உணர்வை அவளின் உடல்மொழி தெரியப்படுத்திற்று.
"என்ன சிரிப்பு?"
"நம்ம உறவு, சினிமா மாதிரியே இருக்கு பிரபா"
"என்ன உறவு?"
"தெரியாத மாதிரி கேட்காதீங்க. புரியலையா? இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும் பிரபா... இல்லேன்னா நாளைக்கு ஷூட்டிங் வர மாட்டேன்..."
தழுதழுத்த குரலில் பேசினாள்.
வார்த்தை தொண்டைக்குழியில் சிக்கிற்று.
எதிர்பார்த்ததைவிட, அதிகமாக காதல் அவளைப் படுத்துவதை பிரபாகர் உணர்ந்தான். பக்குவமற்ற வயது. தன்னை உணராத நிலை. இந்தப் படத்திற்குப் பிறகு 
அவளுக்கான பிரம்மாண்ட இடத்தை அவளால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் இணை இயக்குநர் மீது காதல். இப்போது இவளைச் சமாளிக்க 
வேண்டும். ஏதும் சர்ச்சை எழுந்திடாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். இயக்குநரிடம் இருக்கும் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பை 
வெற்றிகரமாக முடிக்க வேண்டும். நல்ல நடிகை. காதல் மாயையிலிருந்து இவளை மீட்க வேண்டும்.
பிரபாகரனின் மனதுக்குள் எண்ணங்கள் ஓடிற்று. சட்டென அந்த ஐடியா வந்தது.
"ராகினி"
"ம்"
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
தலையணையை நகர்த்தி வைத்துவிட்டு அவன் முகம் பார்த்தாள்.
"உன்னோட எண்ணம் எனக்குப் புரியுது. இதுல அவசரப்பட்டு ஏதும் முடிவெடுக்க முடியாது. நிறைய யோசிக்கணும். நமக்குள்ள ஒரு சின்ன அக்ரிமெண்ட்..."
"சொல்லுங்க பிரபா..."
"படப்பிடிப்பு நாளைக்கு முடியுது. ரெண்டு மாசத்துல படம் ரீலிஸ். படம் நிச்சயம் ஹிட். வெற்றி செய்தி காதுக்கு வந்த அடுத்த நிமிடம் நீ என்னைத் தேடி வர்ற. 
இல்லேன்னா நான் உன்னைத்தேடி வர்றேன்...ஓகே...? அதுக்குள்ள நானும் படம் கமிட் ஆயிடுவேன். நாம கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி முடிவு பண்ணலாம். 
அதுவரைக்கும் அமைதியா இருப்போம். அதான் ரெண்டு பேருக்கும் நல்லது. ஓகே?"
அவனையே உற்றுப் பார்த்தவள் இதுவரை இப்படி ஏதும் ஆசை வார்த்தைகளை அவன் உதடு உச்சரிக்காததால், அவன் முற்றிலும் எதிர்பார்க்காத விநாடியில் பச்சென 
கன்னத்தில் முத்தமிட்டாள்.
"இப்ப டயலாக் பார்க்கலாம்" என்றாள் உற்சாகமாக.
பிரபாகர் எதிர்பார்த்தது நடந்தது. படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் இருந்தது. இரண்டாவது படத்திலும் ஹிட் அடித்து இயக்குநர் ஒரு கோடி சம்பளத்திற்கு உயர்ந்தார். 
படப்பிடிப்பு முடிந்து பலமுறை ராகினி அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் பேசுவதைத் தவிர்த்தான். படம் வெளியான பிறகு நிச்சயம் தேடி வருவாள் 
என்பதை உணர்ந்திருந்தவன், தங்கியிருந்த அறையை மாற்றினான். அலைபேசி நம்பரை மாற்றினான்.
நான்கு படங்களுக்குக் கையில் அட்வான்ஸூடன் தயாரிப்பாளர்கள் அலைந்தபோதும், ராகினி அதைப் பொருட்படுத்தாமல் பிரபாகரைத் தேடினாள். அவன் தங்கியிருந்த 
அறையைக் கண்டுபிடித்து வந்தபோது அது பூட்டப்பட்டிருப்பதையும், பிரபாகர் அறை மாறி விட்டதயும் அதோடு அலைபேசி நம்பரை மாற்றி விட்டதையும் அறிந்தவள் 
தனிமையில் அழுதாள்.
ஒரு வருடம் நகர்ந்தது.
ஹைதராபாத்.
உதவியாளன் வேகமாக உள்ளே வந்தான். பிரபாகர் அவன் வேகத்தை உணர்ந்து முகத்தைப் பார்த்தான்.
"ஸார்... ராகினி உங்களைத் தேடி வந்திருக்காங்க..."
பிரபாகருக்குச் சிறிது அதிர்ச்சி. ஆனாலும் சமாளித்துக் கொண்டான்.
"வாசல்ல வெயிட் பண்றாங்க... அவங்க உங்களத் தேடி வந்திருக்கிற தகவல் போயி புரொட்யூஸர் ஆபிஸூக்கு வந்துக்கிட்டு இருக்காரு சார்..."
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருத்தி. பூஜை போட்ட அன்றே வியாபாரத்துக்கு உறுதி. அவள் தன்னைத் தேடி ஹைதராபாத்துக்கு...
"வரச்சொல்லு... நீங்கள்லாம் கொஞ்சம் வெளில இருங்க"
உதவியாளர்கள் வெளியேறிய உடன் ராகினி உள்ளே வந்தாள்.
"ஹாய்" என்றான்.
அவனையே உற்றுப் பார்த்தாள்.
"கண்டுபிடிச்சி வந்திட்டேன் பார்த்தியா? இந்தியாவுல நீ எங்கே போனாலும் விடமாட்டேன்".
"ஒ.கே. ஆல் த பெஸ்ட். தமிழ் தெலுங்குன்னு கலக்கிட்டு இருக்கே. இந்திலகூட பண்ணப் போறதா கேள்விப்பட்டேன்".
"ஆனா நிம்மதி இல்ல."
"நீதான் அமைச்சுக்கணும்."
"எனக்கு நீ வேணும்."
"விளையாடாதே. இன்னும் நாலு வருஷத்துக்குக் கைல படம் இருக்கு. ஹிந்தில கூப்பிடறாங்க. இப்பப் போயி காதல் கீதல்ன்னு மனச குழப்பிக்காத"
"எனக்குப் பணம் முக்கியமில்ல. மனசுக்குப் பிடிச்சவரோட வாழணும்"
"ஒரு வருஷமாச்சு. நீ இன்னும் மனசை மாத்திக்கலையா?"
"எத்தினி வருஷமானாலும் மாத்திக்க மாட்டேன். நைசா பேசி என்னை ஏமாத்திட்டதா நினைப்பா? பைத்தியமா உனக்கு? சென்னையில் இருந்து ஹைதராபாத் வந்து 
தெலுங்குப் படம் பண்ணப் போற. சொல்லு யாரு வேணும் உனக்கு? எந்த ஹீரோ வேணும் உனக்கு? எந்தப் புரொட்யூஸர்கிட்ட பேசணும்? அடுத்த வெள்ளிக்கிழமை பூஜை. 
நான் ஏற்பாடு பண்றேன்.
படபடத்தாள்.
பிரபாகரன் சிரித்தான்.
"நான் வெளிப்படையா உண்மைய சொல்லிடறேன் ராகினி. மனசுக்குள்ள ஆசையையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கி வச்சிருக்கு... இனியும் மறைச்சா நல்லா இருக்காது. 
எனக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டு. முறைப்பொண்ணு. அடுத்த மாசம் ஆறாம் தேதி சிம்பிளா கும்பகோணத்துல கல்யாணம். நாளைக்குப் பத்திரிகை அடிச்சு வருது. முதல் 
பத்திரிகை உனக்குதான்."
ராகினியின் முகம் பேயறைந்தது போலாகியது.
கண்களில் கண்ணீர் பொங்கிற்று. பிரபாகருக்குப் பாவமாக இருந்தது.
கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
சில விநாடிகளில் வாசலில் இருந்து கார் வேகமாகப் புறப்படும் சத்தம் கேட்டது.
உள்ளே வந்த இணை இயக்குநர் மூர்த்தி, "சார் நான் ஓரளவு கேள்விப்பட்டு இருக்கேன். உங்களுக்குப் படம் கிடைச்சிட்டு. அவங்களும் நம்பர் ஒன் ஆர்டிஸ்ட். எனக்கு 
தெரிஞ்சு உங்களுக்கு அஃபையர் ஏதும் கிடையாது. அப்புறமென்ன? ராகினிய கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே? நடிகைங்கற தயக்கமா?"
இணை இயக்குநர் என்றாலும் பிரபாகர் நட்பு ரீதியாக அவனுடன் எண்ணவோட்டங்களைப் பகிர்ந்து கொள்வான். அந்த உரிமையில் பேசுகிறான்.
பிரபாகர் மூர்த்தியைப் பார்த்து சிரித்தான்.
"பதினஞ்சு வருஷமாச்சு மூர்த்தி. அஸிஸ்டெண்ட் டைரக்டரா ஆவறதுக்காக நான் அலைஞ்சது மறக்காது மூர்த்தி. மழை நேரத்துல வாய்ப்பு கேட்கப் போயி புயல்ல 
மாட்டிக்கிட்டு வடபழனில ஒரு கடை வாசல்ல ஒன்றரை நாள் நின்னேன். அஸிஸ்டென்ட் டைரக்டரா பத்து வருஷத்துல எட்டுப் படம் முடிச்சிருக்கேன். முறையா 
வளர்ந்திருக்கேன். எங்கேயும் குறுக்கு வழி இல்ல.
எங்க டைரக்டரை விட்டு வெளிய வந்த இந்த ஒரு வருஷத்துல நான் கதை சொல்லாத தயாரிப்பாளர் கிடையாது. நடிகர் கிடையாது. இந்தக் கதைக்கு தெலுங்குலதான் 
மரியாதை கிடைச்சிருக்கு. என் உழைப்புக்கான, அலைச்சலுக்கான, முயற்சிக்கான அங்கீகாரம் எனக்கு வேணும் மூர்த்தி..."
அழுத்தமாகப் பேசிய பிரபாகரைக் குழப்பமாகப் பார்த்தான் மூர்த்தி.
"ராகினி மேல எனக்கு சாஃப்ட் கார்னர் இருக்கு. இல்ல... அது வேற. ஆனா இன்னைக்கு நான் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா என் உழைப்பு அடிபட்டுப் போயிடும். 
ஒரு நடிகையோட புருஷனா ரொம்ப சாதாரணமானவனா ஆயிடுவேன். என்னோட தனித்தன்மையை இழந்திடுவேன். இந்த வாய்ப்பு அவ வாங்கிக் கொடுத்ததுன்னு 
பேசிடுவாங்க. பத்து வருஷ முயற்சி அந்த ஒரு வார்த்தைல அடிபட்டுப் போயிடும் மூர்த்தி. நாளைக்கு இந்தப் படம் ஹிட் ஆகி நான் மீடியா முன்னால நிக்கிறப்ப என் 
உழைப்புக்கான உண்மையும் நேர்மையும் அவங்க முன்னாடி வெளிப்படணும்... ஒரு வெற்றி இயக்குநரா என்னை முன்னிலைப் படுத்திக்கணும். குற்ற உணர்ச்சியோட 
நிக்கக்கூடாது."
மூர்த்தி வியப்பாக அவனைப் பார்த்தான்.
"எல்லாமே ஒரு நேர்க்கோடுலதான் வருது மூர்த்தி. ராகினி அறிமுகம். அவளோட வெற்றி. என் மீதான அபிமானம்... இப்ப அவ என்னைத் தேடி வந்தது... எல்லாம்... இப்ப 
இந்தப் படம் ஹிட் ஆகி, ஒரு வெற்றி இயக்குநரா எனக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். என்னை நான் நிரூபிக்கலாம். அப்ப நான் ராகினிய தேடிக்கூட போகலாம். நாங்க 
கல்யாணம்கூட பண்ணிக்கலாம். ஆனா அதுக்கான சந்தர்ப்பம் இப்ப இல்ல. எந்த சூழ்நிலையிலும் என்னோட உழைப்ப, முயற்சிய நான் விட்டுக்கொடுக்கறதா இல்ல மூர்த்தி" 
என்றபடி சிரித்தான்.
நல்ல கிரியேட்டர், இயக்குநர் என்றெல்லாம் பிரபாகரைப் பற்றி இமேஜ் வைத்திருந்த மூர்த்திக்குப் பிரபாகரனின் நேர்மை ரொம்பவே பிடித்திருந்தது.
"ஆல் த பெஸ்ட் சார்" என்றான் சிரிப்புடன், சிலிர்ப்புடன்.
நன்றி: தினமணி கதிர்
        சௌதாமினி வீதி முக்கைக் கடக்கும்போது "கனவு இல்லம்" என்ற போர்டு இருந்த வீட்டைப் பார்த்தாள். கேட் பூட்டியிருந்தது. முகம் இருளடைந்ததுபோல் இறுக்கமாகியது. அரை பர்லாங் தூரம் போனால் புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். அந்தக் கட்டடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அவள் பயணம் நீண்ட பயணம்தான்.
பீகாரிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கோ, டெல்லிக்கோ போவதுகூட நீண்ட பயணம் என்று நினைக்கிறவள் அவள். ஆனால் சௌதாமினியைத் தமிழ்நாடு வரைக்கும் யார் துரத்தியது? ரொம்ப தூரம்தான் வந்துவிட்டாள்.
"கனவு இல்லத்தை" மறுபடியும் பார்த்தாள். கதவு திறந்திருந்ததென்றால் உள்ளே நுழைந்து, "கொஞ்சம் தண்ணீ" என்று கொஞ்சும் தமிழில் கேட்பாள். "கொஞ்சம் தண்ணீ" என்று பேசுவதற்குக் கற்றுக் கொண்டதுதான் முப்பதுநாளில் அவள் கற்றுக் கொண்ட தமிழாகும். கனவு இல்லத்தில் சுகந்தி இருந்தால் தண்ணீர் கொடுப்பாள். காலை பதினொரு மணிக்கோ மாலை மூன்று மணிக்கோ இதே போல வந்து நின்றால், தேநீர் கிடைக்கும். ஆனால் கட்டடத்தில் வேலை செய்பவர்களுக்குக் காலையும் மாலையும் தேனீர் வாங்கி வர ஒருவன் இருந்தான். தேனீர் கடையில் சௌதாமினிக்குப் பிடித்த ஆலு போண்டா வெகு அபூர்வமாகத்தான் கிடைக்கும். ஆலு போண்டாவை ஜிஜேந்திரனும் விரும்பிச் சாப்பிடுவான். ஜிஜேந்திரன் அவளின் அன்பு கணவன் பீகார்காரன்தான். திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் வேலை கொட்டிக் கிடக்கிறதென்று ஏகப்பட்ட பேரை திருமூர்த்தி என்ற புரோக்கர் கூட்டிக் கொண்டு வந்தான். புரோக்கர்களுக்கு ஓர் ஆளைக் கூட்டிக் கொண்டு வந்தால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்த ஆள் தொழிற்சாலையில் ஓராண்டிற்கு மேல் இருந்தால் இன்னொரு ஐநூறு ரூபாய் கிடைக்கும். அப்படித்தான் பீகாரின் புழுதி படர்ந்த குக்கிராமத்திலிருந்து சௌதாமினி, ஜிஜேந்திரன் உட்பட ஐம்பது பேரைக் கூட்டி வந்திருந்தான். திருமூர்த்திக்கு ஒரே ரயில் பயணத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கிட்டியிருக்கும். தலைக்கு ஐநூறு ரூபாய் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது அவனுக்கு. பின்னலாடைத் தொழிற்சாலையில் அவன் கூட்டி வந்ததில் பதினைந்து பேர், "வேலை கடினம்" என்று சொல்லிவிட்டார்கள். மிருதுவான பனியன் துணிகளைப் பக்குவமாய் கையாள வேண்டியிருந்தது. இளம் பெண்ணின் உடம்பைத் தொட்டுப் பார்ப்பது போன்ற மிருதுத்தனம் எவ்வளவு நுணுக்கமானது. புழுதி பறக்கும் கிராமத்தில் இருந்து ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சிரமம்தான். பேக்கிங், செக்கிங்கூட பிடிபடவில்லை. திருமூர்த்தி பதினைந்து பேரை வெளியேற்றிவிட்டான். "சப்பை மூக்கு மஞ்சள் தோலு நேபாளிங்ககூட எவ்வளவு பேர் உங்க கண்ணு முன்னாலே பனியன் கம்பனியில வேலை செய்யறாங்க. உங்களுக்கென்ன கேடு? மூணு வேளை சாப்பாடு, தங்க எடம். கல்யாணமாகாதவங்கன்னா முப்பதாயிரமோ, ஐம்பதாயிரமோ தருவாங்க. கூடவே அரைப் பவுன் தாலியும்"
"சுமங்கலி ஸ்கீம்"
"ஆமாமா... சுமங்கலிகளா கூட்டிட்டு வந்திருக்கலாம் போலிருக்கு. பனியன் கம்பனியில வேலை செய்யறது எவ்வளவு சொகுசு"
"ஆனா எங்களுக்குப் பிடிபடலியே... என்ன பண்றது?"
ஷாஜஹான் மேஸ்திரியிடம் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினான்.
"கம்பெனி வேலைக்குன்னு கூட்டிட்டு வந்தது. பிரயோஜனமில்லை. கட்டட வேலைக்காவானுக. பீகாருக்குத் திரும்பிப் போய் ரொட்டி சுட்டுத் திங்க ஆசையில்லங்கறானுங்க. இட்லி சாம்பார்ல மூழ்கிப் போயிட்டானுக. கட்டட வேலைக்கு எடுத்துக்கோ" ஷாஜஹான் திருமூர்த்திக்குப் புரோக்கர் கமிஷனாக ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தான்.
இப்போதைக்கு நகரத்தைத் தாண்டி ஒதுக்குப் புறமான இடத்தில் பனியன் கம்பெனி கட்டட வேலை நடக்கிறது. அது முடிய நாலைந்து மாதங்களாகும். பிறகு வேறு கட்டிடம் முளைக்கும். புதிய மாவட்டமாகிவிட்டது. கார்ப்பரேஷன் எல்லை விரிவாகிக் கொண்டிருந்தது. சண்டை போட மொழி தேவையில்லாதபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பது போல பீகாரில் தங்கள் மொழியில் ஏதாவது பேசிக் கொண்டு வேலை செய்து வந்தனர். இட்லியும் தோசையும் சாம்பாரும் அவர்கள் வாயை அடைத்திருந்தது.
கட்டட சாரத்தின் மேல் நின்று ஜிதேந்திரன் தூரப் பார்வை பார்த்தான். தாறுமாறாய் புல்லும் முள்ளும் அடர்ந்து கிடந்தது. பாதையென்று அழுத்தமான தடமாய் எதுவுமில்லை. கட்டட வேலைக்கென்று வந்து போகிற பீகாரிகளும், ஷாஜஹான் மற்றும் வாகனங்களும் ஏற்படுத்தியிருந்த தடம் தான் மெல்லியதாகத் தெரிந்தது. மனைவி சௌதாமினி கண்ணில் தென்படவில்லை. வெயில் வேறு கசகசவென்று வியர்வையைப் பெருக்கெடுக்க வைத்தது. சௌதாமினி ஏதாவது வீட்டு நிழலில் வெயிலுக்குப் பயந்து நின்றிருப்பாள். பீகார் வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் பயப்படாதவள்தான் சௌதாமினி. தமிழ்நாட்டின் உச்சிவெயிலில் வானத்தையும் சூரியனையும் பார்ப்பவள் அவள்.
ஜிஜேந்திரன் சாரத்தைவிட்டுக் கீழிறங்கினான். சற்று தூரத்தில் ஒரு கார் வந்து நின்றிருந்தது. காரிலிருந்து இறங்கிய மூன்று பேர் சாய்ந்து கொண்டு மேற்கு பக்கம் பார்த்தார்கள். சூரியனின் வெம்மையைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் போன்று முகங்களைச் சுருக்கிக் கொண்டார்கள். ஜிஜேந்திரன் அவர்கள் அருகில் சென்று, "தண்ணீ வேணும்" என்றான். கார் உள் அவன் பார்வை அலைந்தது. அவனின் அழுக்கு குர்தாவும் கொஞ்சம் தமிழும் அவனை ஆர்வமாய்ப் பார்க்கச் செய்தது.
"தண்ணியில்ல"
"தாகம்"
"தண்ணியெதுவும் இல்லெ" ஜிஜேந்திரனின் கண்கள் காரினுள் அலைபாய்ந்தன.
"கொஞ்சம் குடிக்க"
"கார் சூடாயிருச்சு. காருக்கு ஊத்தத்தான் தண்ணியிருக்கு" ஜிஜேந்திரன் மீண்டும் வார்த்தைகளாய் சொல்லாமல் கை விரல்களை வாய் அருகே கொண்டு சென்று சைகை செய்தான்.
"காருக்குத்தான் இருக்கு".
அவன் பீகாரிலிருந்து புறப்படுவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தான். திருமூர்த்தி வேறு அவ்வப்போது தலையைக் காட்டி, "ஐம்பது பேர் சேர்ந்தாச்சு. நீ ஐம்பத்தி ஒண்ணாவதா சேர்ந்துச்சு, தமிழ்நாட்ல வேலை கொட்டி கெடக்கு. எதுக்கு ஆடு மேய்க்கறே" என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆடுகளை ரொம்ப தூரம் ஓட்டி வந்துவிட்டான் என்று தெரிந்தது. கும்பலாய் நிறையப் பேர் தென்பட்டதும் அருகில் சென்றான். கார்கள் ஏழெட்டு நின்றிருந்தன. அவற்றின் வர்ணங்களில் மயங்கியவன் போல் நின்றான். இன்னும் தூரத்தில் காமிராவில் ஏதோ படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். சுவாரஸ்யம் இல்லாத மாதிரி கார்களைப் பார்த்தான். தண்ணீர் கேட்டான். இல்லையென்றார்கள். தாகத்தால் திரும்பத் திரும்ப நாக்கு வறண்டு தண்ணீர் கிடைக்கவில்லை. அன்றைக்கு மாலை திருமூர்த்தியைப் பார்த்தபோது தலையாட்டிவிட்டான். "இன்னிக்கு ராத்திரி ஐம்பத்தொம்பது பேர் திருப்பூர் போறம்"
மீண்டும் நடந்து வந்து சாரத்தின் மேல் ஏறினான்.
வடக்குப் பக்கத்திலிருந்து கற்களை வேறு இடத்துக்கு மாற்றுகிற வேலையை மற்றவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். சாரத்தின் மேற்குப் பக்கம் நடந்து சென்ற ஜிஜேந்திரன் வானம் பார்த்தான். வெயில் கருக்கியது. எச்சிலை விழுங்கி பின் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டான்.
மேற்குப் பக்கம் இன்னும் முழுமையாக முடியாத இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இருந்தது. அதிலிருந்த பிளாஸ்டிக் கயிற்றில் துவைத்த துணிகளைக் காயப் போட்டிருந்தார்கள். வலது கையை நீட்டியபோது மஞ்சள் நிறப் பாவாடையொன்று கையில் பட்டது. மிருதுவாக இருந்தது. பயன்படுத்துபவள் இளம்பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். இழுத்த போது மெல்லிதான பரபரச் சத்தத்துடன் கைக்குள் வந்துவிட்டது. சாரத்தை விட்டுக் கீழே இறங்கினான்.
பக்கத்துக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக்குச் சென்றான். முதல் தளத்திலோ, கீழ் தளத்திலோ யாருமே தென்படவில்லை. அவனின் காலடிச் சத்தத்தைக் கேட்டு வந்த மாதிரி அந்தப் பெண் கதவருகில் வந்து நின்றாள். அவன் கையில் இருந்த மஞ்சள் பாவாடையை நீட்டினான். அவள் அதிர்ச்சியடைந்ததுபோல திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளுடைய அழகான முகத்தில் கண்கள் கோலிக் குண்டுகளாய் உருண்டன. வெகு சமீபமாய்த்தான் புருவங்களைச் செதுக்கியிருந்ததால் முகம் பளிச்சென்று இருந்தது.
"என்னுடையதுதா"
"கீழே வேலை செஞ்சுட்டிருந்தன். கீழே கிடந்தது. அதுதா எடுத்துட்டு வந்தன். உங்களதுதானா?" பீகாரியில்தான் அவன் சரசரவென்று சொல்லிவிட்டு அவளின் பளிச்சென்ற முகத்தைப் பார்த்தான்.
"என்னுடையதுதான்" அவள் பிடுங்கிக் கொண்டவள் போல விரைசலாய் வாங்கிக் கொண்டாள். பனியன் பிசிறு வெட்டிக் கொண்டிருந்தவள் போலும், பஞ்சுத் துகள்கள் முகத்தில் பரவியிருந்தன.
"தண்ணீ வேணும்"
உள்ளே சென்றாள். திரும்பி வந்து பிளாஸ்டிக் பாட்டிலை நீட்டினாள். இரண்டு மடக்கு உள்ளே சென்றதும், உயிர் வந்ததைப் போல இருந்தது.
கைகளை உயரே தூக்கி அவளைக் கும்பிட்டான்.
நன்றி: தினமணி கதிர்
அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான்.
இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தான். வாயிலிருந்து வெளிப்பட்ட குப்பென்ற மதுவாடை மதுவை விரும்பி குடித்த அவனுக்கே பிடிக்கவில்லை தான் போலும்... அந்த வாடை அவனுக்கு கொஞ்சம் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது.
வீட்டு கதவை தொட்டு தடவி வலது பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை வேகமாக அழுத்தினான்.
வீட்டுக்குள் விளக்கு எரிந்தது. கதவை திறந்து கொண்டு அவனுடைய வயதான அம்மா நின்று கொண்டிருந்தாள்.
"ஏம்பா...இவ்ளோ லேட்டு..?" என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மகனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்.
கடிகாரம் மணி நள்ளிரவு பனிரெண்டரை என்று காட்டியது.
இல்லமா...கொஞ்சம் வேலை அதிகம் என்று அவன் சொல்லி சமாளித்தாலும் அவன் கூடவே சேர்ந்து வரும் மதுவின் வாடை அவன் தாமதமாக வந்த காரணத்தை அவளுக்கு உணர்த்தியது. அவள் எதையும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை.
அவன் கைப்பையை வாங்கி ஒரு மூலையில் வைத்து விட்டு அவனை கிணற்றடிக்கு அழைத்து சென்று அவன் ஆடைகளை களைந்து விட்டு, அவன் உடல் முழுவதுமாய் நனையும் படி தண்ணீரை வாரி இரைத்து ஊற்றினாள். நடு இரவு என்பதால் நீர் வழக்கத்தை விட அதிகமாக குளிரும் தான். ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் அதை அவனால் உணர முடியவில்லை.
மகனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று நாற்காலியில் உட்கார வைத்து ஈரம் படிந்த அவன் தலையை நன்றாக துடைத்தெடுத்து அதிகபட்ச வேகத்தில் மின்விசிறியை ஓட விட்டு அவனுக்கு வேறு உடை மாற்றி விட்டாள்.
அவன் சாப்பிடுவதற்கு சாப்பாடு எடுத்து வந்து அவனை சாப்பிடச் செய்தாள். கூடவே எப்போதும் இரவில் மகனுடன் சேர்ந்து சாப்பிடும் அவள் அவனுடன் சேர்ந்து சாபிட்டாள்.
பின்பு மகனை ஒரு கட்டிலில் படுக்க வைத்து, உடம்பை முழுவதுமாக மூடும்படி உள்ள ஒரு போர்வையை அவன் மேல் போர்த்தி விட்டு அந்த கட்டிலின் பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த தனக்கான பாயில் படுத்துக்கொண்டாள்.
காலை விடிந்தது...
அம்மா வாசலில் மாட்டுசாணம் தெளிப்பது, கோலம் போடுவது, குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பது, காலை சிற்றுண்டி தயாரிப்பது என்று அவளுடைய வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தாள்..
இவன் பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பது, சிறுது தூரம் நடைபயிற்சி பழகுவது என்று வழக்கமான தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
இவற்றையெல்லாம் முடித்து விட்டு குளித்து வேலைக்கு கிளம்ப தயாராகும் தன் மகனுக்கு உணவை ஒரு கிண்ணத்தில் அடைத்து தயாராக வைத்திருந்த அம்மாவிடம் அதை வாங்கிக்கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தை உதைத்து கிளம்பும் போது "அம்மா நான் போயிட்டு வர்றேன்" என்று அவன் விடைபெற, அதற்கு அம்மா "சரிப்பா பத்திரமா போயிட்டு வா...ஆனா நேத்து நைட்டு வந்த மாதிரி வராதப்பா...அத அம்மாவால தாங்கிக்க முடியாதுப்பா" என்று சொன்னாள்.
"நாகரீகம்" என்று வார்த்தையைகூட எழுத தெரியாத அம்மாவின் அந்த ஒரு வார்த்தை அவனுக்கு "சுரீர்" என்றிருந்தது.
Tamilnadu Classifieds - Koodal Business Link